கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். பெங்களூரைச் சேர்ந்த இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்த இவர் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து வந்தார்.
அவருடன் 5 ஆண்டுகள் லிவிங் டு கெதர் லைஃப்பில் வாழ்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.அர்னவ் முஸ்லிம் என்பதால் திவ்யா அவருக்காக மதம் மாறித் தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
இதையடுத்து இருவரும் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதோடு தங்களின் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்ப்பிணியான தன்னை அர்னவ் அடித்து உதைத்தாகவும் இதனால் தனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் திவ்யா கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும் அர்னவ் செல்லம்மா சீரியல் ஹீரோயினுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தன் கண்முன்னே இருவரும் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார் திவ்யா. இதேபோல் அர்னவும் திவ்யாதான் தன்னை அடித்ததாகவும், கருவை கலைக்க திட்டம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் திவ்யா தன்னுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அர்னவ். அதில் அர்னவை துரோகக்காரா, நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய், நீ ஆம்பளையாடா போய் சாவு என கேட்கிறார் திவ்யா. மேலும் ஈஸ்வர் என்பவருடனும் போனில் குடும்பத் தகராறை கூறி வருகிறார் . அர்னவ் ஷேர் செய்த இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.இவர்கள் மாறி மாறி குற்றம் சாட்டுவதால் யார் மீது தவறு இருக்கின்றது என தெரியாமல் போலீஸாரே கடும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!