தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற பரவிய செய்திக்கு நண்பர்கள் அளித்து இருக்கும் பதில் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் தெரிந்த ஒன்று. தனுஷ்- ஐஸ்வர்யாவின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் கசிந்தது.அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.அதாவது, ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா இருவர் இடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தார் என்ற செய்தி சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது.
மேலும் இது குறித்து தனுஷிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாவது, தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே தற்போது தனித்தனியாக தான் இருக்கிறார்கள். வார நாட்களில் குழந்தைகள் ஐஸ்வர்யாவிடமும், சனி, ஞாயிறு நாட்களில் தனுஷ் இடமும் இருக்கிறார்கள். இதற்கு முன்னே தனுஷ் ஐஸ்வர்யாவிற்கும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால், அவை எதுவும் ஏற்றுக்கொள்ள தக்கவை அல்ல.
இருவருமே தேவைக்காக குழந்தைகள் செல்லும் இடத்திற்கு செல்கிறார்கள். இப்போது இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வருவது உண்மையானவை இல்லை.அத்தோடு இருவரும் சேர்ந்து விவாகரத்து கூறும் எண்ணமும் இல்லை. மறுமணம் என்ற பேச்சுக்கே இடமே இல்லை. இந்த உண்மைகளை தெரியாத யாரோ சிலரால் பரப்பி விடப்பட்ட செய்தி தான் இது. பிரிந்தது பிரிந்தது தான். இதுதான் உண்மை என்று தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த படத்தை ஒப்பிட்டு மீம்ஸ்களை கிரியேட் பண்ணி வருகிறார்கள்.அதாவது அந்த படத்தில் இருக்கு ஆனா இல்லை என கூறிய வசனத்தோடு கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!