• May 04 2024

படு கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்…குழம்பிய ரசிகர்கள்…வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரைத் துறையில் வளர்முக நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவில் 2016-ஆம் ஆண்டு 'கவலை வேண்டாம்' என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர் முன்னர், குறிப்பாக 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் உருவாகிய 'இனிமேல் இப்படித்தான்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இப்படப்பிடிப்பில் யாஷிகா முழுமையாகக் கலந்து கொள்ளாத காரணத்தால் அப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இவ்வாறு ஒரு சில படங்களில் நடித்து அறிமுகமாகி இருப்பினும் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மேலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கு பற்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார்.

இவ்வாறாக படங்களில் நடித்து வரினும் யாஷிகா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதற்கு எப்போதுமே மறப்பதில்லை. அவ்வப்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்.

அந்த வகையில் தற்போதும் இவரால் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் லைக் செய்யப்பட்டும், கமெண்ட் செய்யப்பட்டும் வருவதைக் காணலாம். எனினும் பல ரசிகர்கள் இதற்கு எதிர்மறையான கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதாவது அப்புகைப்படத்தில் யாஷிகா படு கவர்ச்சியாக உடையணிந்தமை பலருக்கும் பிடிக்கவில்லை. இருப்பினும் இப்புகைப்படங்களை பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement