• May 18 2024

"சாவு வண்டியையே நான் சுற்றுலாவாகத்தான் பார்க்கிறேன்"…கிருத்திகா உதயநிதியின் கலகலப்பான பேச்சு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கிருத்திகா உதயநிதி. இவர் பிரபல நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதியின் மனைவி ஆவார். மேலும் கிருத்திகா 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகனாக சிவா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' என்ற படத்தை இயக்கியிருந்தார். இவ் இரண்டு படங்களும் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அத்தோடு ஓரளவு வசூலையும் பெற்றுக் கொடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் 'பேப்பர் ராக்கெட்' என்னும் வெப் சீரிஸை இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கே ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடர் ஆனது ஜி5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த தொடரை உதயநிதி நன்றாக இருக்கிறது என பாராட்டி இருந்தார். அத்தோடு 2 வது சீசன் உள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.

'பேப்பர் ராக்கெட்' என்ற இவ் வெப் சீரிஸ் ஆனது சாலையில் பயணிக்க தொடங்கும் ஆறு அந்நியர்கள் குறித்தான கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது. இவர்களின் தனிப்பட்ட சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கதை நகர்ந்து செல்கின்றது. பயணத்தின் போது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றும் சுவாரஸ்யம் கலந்த நிகழ்வுகள் பல இடம் பெற்றுள்ளன. 2021 அறிவிப்பு வெளியிடப்பட்ட இந்தத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் 'பேப்பர் ராக்கெட்' படம் குறித்து கிருத்திகா சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார். அவர் கூறிய விடயம் வைரல் ஆகி வருகிறது. அதாவது சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பத்துடன், பெற்றோர்களுடன் என அனைவரும் பார்த்து ரசிகக்கூடிய தொடராக பேப்பர் ராக்கெட் இருப்பதாக கூறியுள்ளார். அத்தோடு அழுகை சிரிப்பு என எல்லா உணர்வுகளையும் கொண்டதாக பேப்பர் ராக்கெட் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் "இறப்பு எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும் அதனால் நாம் ஏன் அதை பற்றி கவலைப்பட வேண்டும். நான் சாவையே ஒரு ட்ரிப்பாகத்தான் பார்க்கிறேன். அதனால் தான் இந்த தொடரில் ஒரு சாவு வண்டியை ட்ரிப் வண்டியாக மாற்றி உள்ளேன்" என கலகலப்பாக பேசியுள்ளார் கிருத்திகா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement