• May 18 2024

சிறந்த மனைவிக்கு முன்னுதாரணம் நடிகை பிரணிதா...என்ன செய்தார் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர். 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'போக்கிரி' என்ற திரைப்படம் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.

இவரது நடிப்பில் வெளிவந்த ஏனைய படங்களாக 'எம் பில்லோ எம் பிள்ளடோ, உதயன், பீம தீரதல்லி, சகுனி, அத்தரிண்டிகி தாரீடி' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர வேறு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு சில விருதுகள் கிடைத்துள்ளன. சினிமாவுடன் மட்டும் நின்று விடாது ஜோய் ஆலுக்காஸ், எஸ் பி சில்க் சேலம்,போம்பே ஜுவல்லரி, லைட் அகடமி ஆப் எடுயு கேஷன் போன்ற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸடராகவும் செயற்படுகின்றார் .

அதுமட்டுமல்லாது மேலும் பல வணிக நடவடிக்கைகளிலும், அறக்கட்டளை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள இவர் 2021-ஆம் ஆண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2022 இல் பெண் குழந்தை ஒன்று பிறந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். இது பிரணிதாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இது தவிர அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் வழக்கத்தை கொண்ட இவர், தற்போது இவரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

அப்புகைப்படத்தில் பிரணிதா தனது கணவருக்கு பாத பூஜை செய்கின்றார். இன்றைய நவீன காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராக சகல துறைகளிலும் முன்னேறி விட்டனர். இதனால் பல பெண்கள் தமது கணவரை மதிக்காத தன்மையே காணப்படுகின்றது. இதன் காரணமாகப் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன. ஆண், பெண் ஒற்றுமை என்பது குறைந்து காணப்படுகின்றது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும் நிலை காணப்படுகின்றது .

இந்நிலையில் பீமா அமாவாசை தினமன்று பிரணிதா தனது கணவருக்கு பாத பூஜை செய்யும் புகைப்படம் இன்றைய பெண்களுக்கு சமூகத்தில் எப்படி கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவர் பகிர்ந்த இப்புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருவதோடு பிரணிதாவின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement