பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ந் தேதி ஆரம்பமாகியது.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21-வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார்.
இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது ஜி.பி.முத்து மற்றும் சாந்தி வெளியேறி 19 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
அவ்வாறு இருக்க ஒவ்வொருத்தரும் எப்படிப்பட்டவர் என பெயர் கொடுக்கப்படுகின்றது.அதில் இந்த வீட்டை அலங்கரிக்கும் தோரணம் மாதிரி இருப்பவர் அமுதவானன் என்றும் குத்துவிளக்கு மாதிரி மகேஸ்வரி மற்றும் ரட்சிதா என்றும் டப்பென்று வெடிப்பது ஜனனி என்றும் கூறுகையில் பிக்பாஸ் வீட்டில் கொழுத்திப்போடுவது யார் எனக் கேட்க இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!