• Sep 21 2024

எதுவாக இருந்தாலும் என்னிடம் முன் கூட்டியே சொல்லிவிடு- சிம்புவை கதி கலங்கச் செய்த கே.எஸ் ரவிக்குமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார். இவர் ஒரு கால கட்டத்தில் பிஸியான இயக்குநராக வலம் வந்தவர். இதனை அடுத்து இவர் தற்பொழுது சில படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தெலுங்கு படமான ரூலர்.இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் அவர் பணிபுரிந்த விதம் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி, கமல், அஜித் என்ற மூன்று நடிகர்களை வைத்து மீண்டும் மீண்டும் படங்களை இயக்கிக் கொன்டிருந்த இவரை சிம்பு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்தனர். தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெற்றி பெற்ற பத்ரா திரைப்படத்தை தமிழில் சரவணா என்கிற பெயரில் ரீமேக் செய்தனர்.

இந்தப்படத்தில் சிம்பு ஜோதிகா கூட்டணி மீண்டும் ஜோடியாக நடித்தனர்.வழக்கமாக நடிகர்கள் முதல், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரையும் ரஃபாக ஹேண்டில் செய்வார் ரவிக்குமார். அதனால்தான் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்கும் நல்ல பெயரை தயாரிப்பாளர்கள் மத்தியில் பெற்றுள்ளார். அவருடைய படப்பிடிப்பிற்கே தினமும் தாமதமாக சென்றுள்ளார் சிம்பு.

இரண்டு நாட்கள் பொறுத்துக் கொண்ட ரவிக்குமார், மூன்றாவது நாள் சிம்புவை அழைத்து, நான் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். நீ வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுத்துக் கொள் என்று
கூறியுள்ளார்.

ஒரு பெரிய இயக்குநர் படத்தை விட்டு விலகினால், அது தனக்கு கெட்ட பேர் ஆகிவிடும் என்று உணர்ந்த சிம்பு அதிர்ச்சியாகி சமாதானம் பேசினாராம். அதற்கு, உன் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக அஜித்தின் வரலாறு படத்தை இயக்க வேண்டும். நீ கண்ட நேரத்துக்கு படப்பிடிப்பிற்கு வந்தால் சொன்ன தேதியில் எப்படி என்னால் படம் பண்ண முடியும் என்று கேட்டுள்ளார்.

ரவிக்குமாரை சமாதானப் படுத்துவதற்காக இனிமேல் சரியாக வருகிறேன் என்று சிம்பு கூறினாராம். அதற்கு, நீ வர வேண்டிய நேரத்தில் வா. அது பிரச்சனை இல்லை. ஆனால் என்னிடம் முன் கூட்டியே சொல்லிவிடு. 9 என்றால் 9 மணி, 11 என்றால் 11 மணி. வரவில்லை என்றால் அதையும் சொல்லிவிடு. நான் அதைப் பொருத்து வேறு காட்சி எடுத்துக் கொள்கிறேன் என்று கூற, சிம்பு அதற்கு ஒப்புக் கொண்டாராம். அதே வேளையில் இரவு நேர ஷூட்டிங் என்றால், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடித்துக் கொடுப்பார் என்று ரவிக்குமார் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement