• Sep 19 2024

பொதுமக்களுக்கு இடையூறு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விசாரிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்த கலெக்டர்.. நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது 'லால் சலாம்' என்ற படம் தற்போது உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 


மேலும் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தினுடைய படப்பிடிப்பு ஆனது சமீபத்தில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


அந்தவகையில் இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்றைய தினம் படமாக்கப்பட்டன. அந்த சமயத்தில் பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல இயலாத வகையில் அந்த இடத்தில சுற்றி கயிறு கட்டியதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் முருகேஷ் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement