நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் 'கருப்பு' திரைப்படம் வசூல் சாதனைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த படம் தற்போது உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இந்த திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. மூன்றாவது வாரத்திலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் நடைபெற்று வருவதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பு படத்தின் மாபெரும் வெற்றியின் பின்னணியில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா சிறப்பான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதன்படி, படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோருக்கு புதிய மகேந்திரா BE 6 சொகுசு கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர்கள் மட்டுமல்லாமல், பின்னணியில் உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை சூர்யா நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
'கருப்பு' திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளை மேலும் பிரம்மாண்டமாக மாற்றியிருந்தது. இதனால் படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இருவருக்கும் சூர்யா இந்த பரிசை வழங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது கார்களை பெற்றுக்கொண்ட சாய் அபயங்கர் மற்றும் ஜிகே விஷ்ணுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. "வெற்றி பெற்றால் தனியாக கொண்டாடாமல், தன்னுடன் உழைத்தவர்களையும் உயர்த்தும் நடிகர் சூர்யா" என்று ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
திரைப்பட வெற்றியை வெறும் வசூல் சாதனையாக மட்டும் பார்க்காமல், அந்த வெற்றியை உருவாக்கிய கலைஞர்களுடன் பகிர்ந்து கொண்ட சூர்யாவின் இந்த செயல் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!