சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் விசாலாட்சி அழுத வண்ணம் காணப்படுகின்றார். மறுபுறம் அருண் ஹாஸ்ப்பிட்டலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அத்தோடு குணசேகரனிடம் "என் பொண்ணு எங்கடா" என்று கேட்டு விசாலாட்சி அழுகின்றார். அதற்கு குணசேகரன் "உங்க பேச்சிற்கும் தோரணைக்கும் எல்லாத்துக்கும் இண்டைக்கு முடிவு கட்டுகின்றேன்" என்கிறார்.
Listen News!