நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தற்போதும் அவ்வப்போது சில திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி தற்போது நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமான இவர் சமீப காலமாக ‘யார் இந்த எஸ்.ஏ.சி’.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ரசிகர்களிடத்தே பகிர்ந்து வருகிறார்.
இவ்வாறு இருக்கையில் விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே கடந்த சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருவது அனைவருக்கும் தெரியும் . எஸ்ஏசி அவரது பிறந்தநாளை விஜய் இல்லாமல் தனிமையில் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.பல கேள்விகளும் எழுந்தது.
அதனால் விஜய்யை அதிகம் பேர் விமர்சித்தனர். பெற்றோரை தனிமையில் தவிக்கவிட்டுவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் எஸ்ஏசி அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி சென்னை எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் எஸ்ஏசி இயக்கிய சட்டப்படி குற்றம் என்ற படத்தின் விளம்பரத்திக்காக தர வேண்டிய 76 ஆயிரம் ருபாய் தொகையை தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இந்த வழக்கில் தான் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!