• Sep 21 2024

பாலியல் புகாரை வாபஸ் பெற ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார் விஜய் பாபு; நடிகையின் அடுத்த குற்றச்சாட்டு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஜய் பாபு.

இவர் "ஹோம், ஆடு, திருச்சூர் பூரம்" போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

நடிகர் விஜய் பாபு மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் " சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" என துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை அளித்திருந்தார்.

இந்நிலையில் அந்த நடிகை தற்போது அவர் மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது "விஜய் பாபுவின் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறினார். நான் முடியாது என்று மறுத்தேன். உடனே எனக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினார்கள். எனினும் நான் அவரிடம் முடியவே முடியாது என உறுதியாக சொல்லிவிட்டேன். உடனே அவர் போனை வைத்து விட்டார்" எனக் கூறியிருந்தார் அந்த நடிகை.

நடிகர் விஜய் பாபுவின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு மலையாள திரையுலகில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement