• Jun 24 2024

'மகாராஜா’ படத்தை நான் தான் தயாரிப்பேன்: மோதிக்கொண்ட விஜய்சேதுபதி - விஜய் ஆண்டனி..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான 'மகாராஜா’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு தயாரிப்பாளர்கள் நான்தான் தயாரிப்பேன் என்று போட்டி போட்டதாகவும் அதே போல் இந்த படத்தில் நான் தான் நடிப்பேன் என விஜய் ஆண்டனி மற்றும் விஜய் சேதுபதி போட்டி போட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் 'மகாராஜா’ படத்தின் கதையை முதலில் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு சொல்லி அட்வான்ஸ் வாங்கிய நிலையில் இந்த படத்தின் கதையை கேள்விப்பட்ட இன்னொரு தயாரிப்பாளர் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன், விஜய் ஆண்டனி தேதி என்னிடம் இருக்கிறது, உடனே படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்று கூறியதாக தெரிகிறது. 

ஆனால் நிதிலன் சுவாமிநாதன் ஏற்கனவே இந்த கதையை பேஷன் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு சொல்லி அட்வான்ஸ் வாங்கி விட்டேன், நான் அவர்களிடம் பேசுகிறேன், அவர்கள் என்ஓசி கொடுத்தால், கண்டிப்பாக நான் உங்களுக்கு படம் செய்கிறேன்’ என்று உறுதி அளித்ததாக தெரிகிறது. 

ஆனால் ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனம் அந்த படத்தை நாங்கள் தான் தயாரிப்பேன் என்று கூறியதாகவும் இன்னொரு தயாரிப்பாளரும் போட்டி போட்டதாகவும் இறுதியில் பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தான் ஜெயித்தது என்றும் கூறப்படுகிறது. 

விஜய் ஆண்டனி இந்த படத்தின் கதையை கேட்டு ஆச்சரியம் அடைந்து இதில் நான் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்த நிலையில் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தின் கதையை கேட்டதும் பிசியான ஷெட்யூலிலும் அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்ததால் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் அவருக்கு இந்த படம் தற்போது வெற்றி படமாகியுள்ளது என்றும் இந்த படத்தை எதிர்பாராத காரணத்தினால் விஜய் ஆண்டனி மிஸ் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement