• May 04 2024

திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ- முதல்வர் மு.க ஸ்டாலினை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கவிதையினாலும் பாடல் வரிகளினாலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கட்டிப் போட்ட கவிஞராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையாற்றி வருபவர்களை கௌரவிக்கும் விதமாகவும் பல கவிதைகளை எழுதி வருகின்றார்.

இந்த நிலையில் தமிழக முதல்வராக திமுக ஆட்சியில் முக ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் கோபாலாபுர இல்லத்திற்கு சென்ற தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார். இவருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது,
"முதலமைச்சே!

பிறையில் முழுநிலா
உறைவது போல
உன்
ஓராண்டு ஆட்சியில்
நூறாண்டுச் சாதனைகள்

என்றாலும் எதிர்ப்பு

கொம்புள்ள யானையும்
கொள்கையுள்ள தலைவனுமே
குறிவைக்கப்படுகிறார்கள்

கொம்பு மட்டுமா
திராவிடக் காடுகாக்கும்
தெம்புள்ள யானை நீ

பேனாவோடு
புதைக்கப்பட்ட கலைஞர்
உனக்கொரு கவி வரைவார்"

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கவிதை வாயிலாக முக ஸ்டாலினை பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/oUsJh-6BVx0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement