• Apr 28 2024

என் வாழ்க்கை சீரழிய வடிவேலு தான் காரணம்.. உண்மையை உளறிய காமெடி நடிகை பிரேம பிரியா..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழில் திரைப்படங்களில் வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை பிரேம பிரியா.

தொட்டி ஜெயா என்ற படத்தில் வில்லியாக அறிமுகமான பிரேம பிரியா கொரோனாவால் கணவன், அப்பா, அக்கா என அனைத்து உறவுகளையும் இழந்து, தன்னந்தனியாக குடும்பத்திற்காக போராடி வருகிறார்.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து பிரேம பிரியா, கொரோனாவால் முதலில் என் அக்காவை பறி கொடுத்தேன், அதன் பின் பத்தே நாளில் என் அப்பா காலமானார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதி முற்றி, உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார். அப்பாவின் மறைவுக்கு பின் என் கணவர் தான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன். அவர் போன பிறகு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோதும் எனக்கு சரியான வேலைகள் கிடைக்கவில்லை அப்பொழுதும் ஒரு நடிகையாக தான் இந்த சமுதாயம் என்னை பார்த்தது. ஒரு நடிகைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாததால் நான் பல மீடியாக்களில் சொல்லி அழுதேன்.

ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பல படங்களில் நடித்து வருகிறேன். நான் கஷ்டப்பட்ட போது எனக்கு சூரி பண உதவி செய்தார். மற்ற நடிகர்களும் எனக்கு உதவி செய்தார்கள்.

வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார். இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. என அந்த பேட்டியில் கூறியிருந்தார் .


Advertisement

Advertisement

Advertisement