தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் அஜித், விஜய், ஜெயம்ரவி, ரஜினி, விஜய் சேதுபதி எனப் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கின்றார். இவரின் நடிப்பிற்கும் அழகிய சிரிப்பிற்கும் மயங்காத இளைஞர்களே இல்லை என்று தான் கூறலாம். அந்த அளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கின்றார்.
இவ்வாறாக சினிமாவில் கொடி கட்டிப் பறந்து வந்த இவர் தற்போதும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையே தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் முன்பு போல் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு அதிக பட வாய்ப்புகள் தற்போது கிடைப்பதில்லை. கையில் கிடைக்கும் ஓரிரு படங்களும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் சினிமாவில் புதுப்புது ஹீரோயின்களின் வரவால் மற்ற நடிகைகள் போலல்லாது இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது. இதனால் நடிகை த்ரிஷா மனம் உடைந்து போயுள்ளார் எனக் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில் திரிஷா "அந்த ஒரு திரைப்படத்தில் நடித்ததால் தான் எனக்கு சினிமா வாய்ப்பே பறிபோனது" என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறிப் புலம்பி கொண்டிருக்கிறாராம். அதாவது த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக 'கொடி' என்ற படத்தில் நடித்திருக்கின்றார். அந்த படத்தில் அவர் தன் காதலனான தனுஷையே கொலை செய்கின்ற கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். அந்தப் படம் வெளிவந்த பிறகு அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் கதாநாயகியாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் 'கொடி' படத்தில் நடித்தது போன்று வில்லி கதாபாத்திரம் மட்டுமே அவருக்கு கிடைத்து வருகின்றது. அனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லாமையால் அந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். அதுமட்டுமன்றி ஒருவேளை அந்த படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்று என்னுடைய ரேஞ்சே வேற மாதிரி மாறி இருக்கும் எனவும் கூறி வருகின்றாராம்.
எனவே "'கொடி' படத்தில் நான் கதாநாயகியாக இல்லாமல் வில்லியாக நடித்ததால் தான் எனக்கு இதுவரைக்கும் ஹீரோயின் வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் வில்லி அல்லது இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மட்டுமே என்னை கேட்கிறார்கள்" என்று அவர் ரொம்பவும் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறாக ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளையும் கலக்கி வந்த திரிஷா தற்போது இரண்டாவது ஹீரோயின் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்
- நீல நிற உடையில் ரசிகர்களை மிரள வைத்த ஜான்வி…வெளியாகிய உச்ச கட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்..!
- “என்னைக் குறிவைத்து தாக்குகின்றார்கள், யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்”…மனதை உருக்கும் பிரபல நடிகையின் பதிவு
- “இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்”…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை
- அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருந்த நடிகர்…அவர் யாரு..கடைசியில அவர் நிலைமை என்னாச்சு தெரியுமா..?
- இந்தப் பிரபல நடிகரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா?…வெளியாகிய தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!