• Apr 26 2024

அவ எனக்கு தங்கச்சி மாதிரி முதுகில கை வைச்சதுக்கு காரணம் இது தான்- மனம் நொந்து போன அசல் கோளாறு.

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு வாரங்களை கடந்து ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருந்தவர் தான் அசல் கோலாறு. வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கோலாறு என்று மாற்றி வைத்துள்ளார்.

ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான இவர் சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.


குயின்சி மற்றும் நிவாசினியிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்.அதுமட்டுமில்லாமல் நிவாஷினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் வேலைகளை செய்து இருந்தார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியேறிய போது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘பொதுவாக இந்த இடத்தில் இருந்து வருபவன் எல்லாம் அப்படி தான் இருப்பான் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. வெளியில் நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன் என்று கூறினார்.


மேலும் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு தன்னை கேலி செய்து வந்த சில மீம்ஸ்கள் குறித்தும் கூறியிருந்தார். அதில் ‘ஜனனிக்கு காய்ச்சல் வந்த போது அவர் முதுகில் கைவைத்து நான் பார்த்தேன். அதை கூட தவறாக மீம் போட்டு இருக்கிறார்கள். அது என் தங்கச்சி மாதிரி, ஏன் இப்படியெல்லாம் பண்றாங்கனு தெரியல. எனக்கு எந்த பின்புலமும் இல்லை என்பதால் தான் இணையத்தில் இப்படி எல்லாம் என்னை போட்டு காலய்த்துவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement