• May 19 2024

அனிரூத் லவ் பண்ணுறதுக்கு வாய்ப்பே இல்லை சேர்- ரஜினியிடம் உண்மையை போட்டுடைத்த நெல்சன்

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்திடமும் படு காமெடியாக பேசி அலப்பறை செய்திருக்கிறார் நெல்சன். இதுகுறித்து ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது கதையெல்லாம் கேட்டு முடித்துவிட்டு ஷூட்டிங் சென்றோம். அப்போது நெல்சன் என் அருகில் வந்தார். வந்து சார் உங்க காதல் கதையை சொல்லுங்க சார் என்றார். என்னது காதல் கதையா என்ன நெல்சன் என கேட்டேன். அதற்கு அவர் இல்லை சார் நிறையே பேர் சொல்லிருக்காங்க ஆனா அதை உங்க வாயால கேட்க வேண்டும். சொல்லுங்க சார் அதான் கதையெல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சே.கொஞ்சம் சார்ஜ் ஏத்திக்கணும் சார் என்றார்.


இவர் சார்ஜ் ஏத்திக்க எங்க காதல் கதையெல்லாம் சொல்லனுமாக்கும் என நினைத்துக்கொண்டேன். பிக்பாஸ்ல கமலோட ஒர்க் பண்ணிங்களே அவர்ட்ட காதல் கதையை கேட்டீங்களா என கேட்டேன். அதற்கு இவர் கேட்டேன் சார் என்றார்.நான் அவர் சொன்னாரா என கேட்டேன். ஆமா சார் சொன்னார் என்றார். சார் உங்க காதல் கதையா சொன்னீங்களா என்று நான் அவர்ட்ட ஃபோன் பண்ணியா கேட்க முடியும்.

அதேபோல் ஒருமுறை யோகிபாபு நடித்துக்கொண்டிருந்தார். ஷாட் ஓகே ஆகவில்லை. உடனே நெல்சன் இன்னும் கொஞ்சம் குறைங்க. இப்படி வேண்டாம் அப்படி வேண்டாம் என சொன்னார்.. யோகிபாபு என்னிடம் வந்து சார் நெல்சன் சாவடிக்கிறான் சார் என்றார். என்னிடம் இப்படி சொல்வதற்கு முன்னாடி நெல்சனிடம் யோகிபாபு டேய் மைக் எதும் வைச்சிருக்கியா என்றார். அதற்கு நெல்சனோ இல்லை என சொன்னார். அதுக்கு பிறகு தைரியமா என்னிடம் யோகிபாபு, சார் சாவடிக்கிறான் சார். ஸ்கேல் வெச்சு மெஷர் பண்ணியா நடிக்க முடியும் என்றார். அதை கவனித்த நெல்சனோ, ஓய் என்ன சாவடிக்கிறேனு சொல்ற. உன் லிப் மூவ்மெண்ட் எனக்கு தெரியுது என்றார்.


இப்படி ஜாலியாக இருந்தாலும் வேண்டும் என்பது கிடைக்கும்வரை விடமாட்டார். ஒரு ஷாட்டில் ரம்யா கிருஷ்ணனிடம் எக்ஸ்பிரெஷன் கொடுக்க வேண்டும். ஆனால் நெல்சன் திலீப்குமாருக்கு திருப்தி இல்லை. மொத்தம் 8 டேக்குகள் போயின. 24 வருடங்களுக்கு பிறகு நீலாம்பரிக்கு முன்னாடி இந்த படையப்பாவோடு மானமே போயிடுச்சு. கலாநிதி மாறன் சொன்னதுபோல் அனிருத்தும் நெல்சனும் இணைந்து நடிக்க வேண்டும். 

ப்ரோமோவுக்கே ப்ரோமோ செய்தவர்கள் இவர்கள்தான். ஒருமுறை நெல்சனிடம் ஏன்ப்பா அனி ஏதும் லவ் பண்றானானு கேட்டேன். ஐய்யய்யோ அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல சார் என்றார். நான் ஏன் என கேட்டேன். ஆமா சார் லவ் பண்ணா ஒருநாளைக்கு இரண்டு, மூன்று தடவைதான் லவ்வர்ட்ட ஃபோன்ல பேசணும். ஆனால் இவன் ஃபோனே எடுக்கமாட்டான் என கூறினார்" என்றார். ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகu்களை குஷிப்படுத்தியுள்ளது எனலாம்.


Advertisement

Advertisement