• May 22 2024

பழனிச்சாமி வீட்டுக்கு போன கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி- பாக்கியாவை காண்டீனை விட்டு நிறுத்திய ராதிகா-Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்று அமிர்தாவைப் பற்றி கேட்ட போது அவர் தன்னை வெளியில் விட்டு கதவை சாத்திய விஷயத்தை தன்னுடைய அம்மா அப்பாவிடம் வந்து சொல்கின்றார். அவங்க சென்னைக்கு எல்லாம் போகல நீங்க பொய் சொல்லுறீங்க என்று சொல்கின்றார்.


அப்போது அவருடைய அம்மா அப்பிடி எல்லாம் ஒன்றும் இல்லடா நீ பொறுமையாக இருடா அவங்க கிட்ட பேசலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து ராதிகா ஆபிஸ் மனேஜரான கோடீஸ்வரன் ராதிகாவை அழைத்து நம்ம கம்பனி ஹெட் ஆபிஸிற்கு வரச் சொல்லியிருக்கிறாங்க,நான் இன்டைக்கே போகனும் நான் வரும் மட்டும் நீங்க தான் கம்பெனியைப் பார்த்துக்கனும் என்று சொல்கின்றார்.

இதனைக் கேட்ட ராதிகா மிகவும் சந்தோஷப்படுகின்றார். அத்தோடு இனிமேல் இந்த கம்பெனி என்ர கைவசம் தான் நான் நினைச்சதைப் பண்ணலாம் என்று சொல்கின்றார். மறுபுறம் கோபி பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று கண்டபடி திட்டுகின்றார். பாக்கியாவின் பையனுக்கு குழந்தை பிறக்கப்போகுது அவளுக்கு 43 வயசாகுது அவளுக்கு பின்னால சுத்திறியே வெட்கமா இல்லையா என்று கேட்கின்றார்.


இதனால் கோபமடைந்த பழனிச்சாமி,நாங்க நட்பாகப் பழகின்றோம். அதில உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கின்றார். தொடர்ந்து பழனிச்சாமியின் அம்மாவும் அவங்க நட்பாக பழகுறாங்க,அந்த வீட்டில இருந்து எங்க வீட்டுக்கு வாறாங்க,நாங்களும் போய்ட்டு இருக்கிறோம் அதில உங்களுக்கு என்ன பிரச்சினை பாக்கியாவை கல்யாணம் கட்டுற மாதிரி சூழ்நிலை வந்தால் கூட கட்டி வைப்பேன் உனக்கென்ன நீ வீட்டை விட்டு போ என அனுப்பி வைக்கின்றார்.


கோபி போனதும் பழனிச்சாமி அவருடைய அம்மாவிடம்,ஏன்மா இப்பிடி சொன்னீங்க,நாங்க நட்பாகத் தான் பழகின்றோம்.நட்பாகவே இருப்போம் என்று சொல்லி விட்டு செல்கின்றார். மறுபுறம் ராதிகா கம்பெனியில் தன்னை ஹெட் ஆக்கியதால் பாக்கியாவின் கான்டீன் ஆடரை கான்சல் பண்ணியதோடு பாக்கியாவிடம் காண்டீனை விட்டு போகச் செல்லுமாறும் சொல்கின்றார். இதனால் பாக்கியா கெஞ்சுகின்றார். இருப்பினும் ராதிகா பாக்கியாவை பிடிவாதமாக நின்று காண்டீனை காலி பண்ணிட்டு போகச் சொல்கின்றார். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement