• May 01 2024

நடிகர் கார்த்தியின் படத்தில் அனுஷ்காவுக்கு வந்த சோதனை- கடைசில திரும்ப அனுப்பி விட்டாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அனுஷ்கா.. தெலுங்கில் 2005ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்னும் படத்தில் பேய் கதாப்பாத்திரத்தில் நடிததன் மூலம் பிரபல்யமானார்.இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.

இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மாறிமாறி நடிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. பின்னர் இவர் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்துக் கொண்டார்.


இதனால் உடல் உடையை மீண்டும் குறைக்க முடியாமல் பல கஷ்டங்கள் பட்டார்.இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.இருப்பினும் தற்பொழுது அவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்துள்ளன.அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த 7ஆம் தேதி வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. 

 இந்நிலையில் கார்த்தியுடன் தமிழில் அவர் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இணைந்து நடித்தார். அப்போது அவருக்கு ஒரு சிக்கல் எழுந்ததாகவும் அதன் காரணமாக அரை மனதோடு அதில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது அந்தப் படத்தில் தனக்கு மேக்கப் போடுவதற்காக தனியாக ஆட்களை அழைத்து வந்தாராம் அனுஷ்கா. 


ஆனால் அப்படி அழைத்து வரக்கூடாது என்று மேக்கப் யூனியனிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். இதனையடுத்து அனுஷ்காவிடம் சென்ற கார்த்தி தயவு செய்து நீங்கள் அழைத்து வந்த ஆட்களை திருப்பி அனுப்பிவிடுங்கள். இல்லையென்றால் இங்கு பெரிய பிரச்சனையே வெடிக்கும் என்றாராம். இதனால் அனுஷ்கா தான் அழைத்து வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டு தனக்கு தானே மேக்கப் போட்டுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement