பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜிக்கு சாறி வாங்கிக் கொடுத்திட்டு ஒரு சாறி போதாது இன்னும் நிறைய எடுத்துக்கோ என்கிறார். அதுக்கு ராஜி எனக்கு ஒன்னே போதும் என்கிறார். பின் கோமதிக்கும், அரசிக்கும் ட்ரெஸ் எடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ராஜி கதிருக்கு shirt வாங்கித் தாறேன் என்று சொல்லிட்டு வாங்கிக் கொடுக்கிறார்
அதனை அடுத்து அஞ்சலி சரவணனுக்கு Voice msg போட்டுக் கதைச்சுக் கொண்டிருக்கிறார். பின் மாறி மாறி ரெண்டு பேரும் Voice போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் கோமதி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைச்சுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பழனி சரவணனைப் பார்த்து கடையில வேலை எல்லாம் எப்புடி போகுது என்று கேட்கிறார்.
பின் கோமதி பழனியைப் பார்த்து இனிமேல் நான் அவரை திரும்பி கூட பார்க்கமாட்டேன் என்கிறார். மேலும், எனக்கும் அவருக்கும் வேற எதுவும் இல்ல ஒரே வீட்டில இருப்போம் அவ்வளவு தான் என்கிறார் கோமதி. அதைத் தொடர்ந்து பழனி பாண்டியனைப் பார்த்து அக்கா பாவம் மச்சான் அவங்களோட கதையுங்க என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் இவள் பாவம் மாதிரி நடிச்சு குடும்பத்தையே ஏமாத்தி இருக்கா இவள் பாவமா? என்று கேட்கிறார்.
அதனை அடுத்து பாக்கியம் மயிலைப் பார்த்து எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பார் என்கிறார். அதைக் கேட்ட மயில் தங்கச்சி, தப்பு பண்ணது நீதான் என்று பாக்கியத்தைப் பார்த்துச் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியம் நான் என்ன செய்தேன் அவளுக்கு புருஷனை கைக்குள்ள வைச்சிருக்க தெரியாது என்று கோபமாக சொல்லுறார். அதைக் கேட்ட மயில் அழுது கொண்டே ரூமுக்குள்ள போறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!