• May 20 2024

விராட் கோலி, ரோஹித்தினால் ஏற்பட்ட சண்டை... இறுதியில் நண்பனை வெட்டிக் கொலை செய்த நபர்... கைது செய்த போலீஸார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் பிரபலங்களுக்காக அவர்களின் ரசிகர்கள் முட்டி மோதிக் கொள்வது வழமை. அதாவது விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்கிடையில் நடக்கும் முரண்பாடுகள் போன்று ஏனைய பல பிரபலங்களின் பேரைக் கூறிக் கொண்டும் அவர்களின் ரசிகர்கள் வாக்குவாதப்பட்டு வருவது வழமை.


இதேபோன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடானது மரணம் வரை சென்ற சம்பவமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் கிரிக்கெட் வீரர்களை பற்றி தவறாக கூறிய தனது நண்பனை வெட்டிக் கொலை செய்திருக்கின்றார். அதாவது ஆர்சிபி ரசிகரான தர்மராஜ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகரான விக்னேஷ் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.


இந்நிலையில் இவர்கள் இருவரும் மது அருந்திய போது போதையில் கிரிக்கெட் வீரர்களான விராட்கோலி, ரோஹித் குறித்து மாறி மாறித் தவறாக பேசியுள்ளனர்.

இவ்வாய்ச்சண்டை ஆனது இறுதியில் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் விக்னேஷை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் தர்மராஜை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவமானது பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement