• May 21 2024

மனம் ஏற்க மறுக்கிறது,இது கனவாக இருக்க கூடாதா கடவுளே- மாரிமுத்துவின் உடல் தகனம்.. விடைபெற்றார் ஆதிகுணசேகரன்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தொடக்க காலத்தில், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் ஹோட்டலில் வெய்ட்டராக பணி புரிந்து பின்னர் உதவி இயக்குநராக தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் இயக்குநர் மாரிமுத்து.குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வந்தார்.வெள்ளித்திரையில் கிடைக்காத அங்கீகாரம் சின்னத்திரையில் கிடைத்ததில் மாரிமுத்துவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

மிகு குறுகிய காலத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார் மாரிமுத்து. இவரை இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்தார் . ஏய் இந்தாம்மா என அதட்டலாக பேசும் வசனத்தில் இருந்து, மதுரை உடல்மொழி வரை எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்தார்.


இந்நிலையில், நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வியர்த்துள்ளது இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த மாரிமுத்து, அவரே காரை ஓட்டி கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுஅவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் போதே அவரது உயிர்பிரிந்துள்ளது.


இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பசுமலைத் தேரி என்னும் இடத்தில் சற்று முன்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement