• May 19 2024

ரொம்ப கஷ்டப்பட்டு வந்தான், அவன் நினைவே எங்களுக்கு வேண்டாம்- மாரிமுத்துவின் சகோதரன் சொன்ன தகவல்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை கலந்துகொண்டு இருக்கிறது. அப்படி யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து.மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்து திரையுலகில் சமீபத்தில் தான் பிரபலமாக துவங்கினார். 

எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்து. ஆனால், அதற்குள் இப்படியொரு சோகம் நடக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார் மாரிமுத்து. இவரை இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்தார் .

 ஏய் இந்தாம்மா என அதட்டலாக பேசும் வசனத்தில் இருந்து, மதுரை உடல்மொழி வரை எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்தார்.இப்போது கூட ரசிகர்களால் இந்த செய்தியை உண்மையென நம்பவே முடியவில்லை. மேலும் திரையுலகை சார்ந்த பலரும் மாரிமுத்துவின் மறைவிற்கு கண்ணீருடன் தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவருடைய அண்ணா பேட்டியளிததுள்ளார். அதில் அவர் கூறியதாவது ககஸ்டப்பட்டு முன்னுக்கு வந்தான். அதனால் அவன் நினைவே வேண்டாம். இறைவன் கொடுத்தாரு அவரே எடுத்துக்கிட்டாரு. அப்பா அம்மா என்றாலே அவனுக்கு ரொம்ப உயிரு. எங்க ஊர் வழக்கப்படி சாயங்காலம் நேரம் தான் தகனம் செய்யப்போறோம்.


அவன் நினைவே வேண்டாம். நல்லடக்கம் பண்ணினால் மரம் நடனும். அவன் நினைவே வேண்டாம் எங்களுக்கு. நல்ல தாணவர்கள் விருதை பெற்றிருக்கிறான். இரண்டு மாசத்திற்கு முதல் வந்திட்டு போனான். நல்ல ஒரு மனிதன். இறப்பு என்பது எல்லோர் வீட்டிலும் நிகழ்வது தான் இதை ஏற்றுக் கொண்டு போகவேண்டியது தான் என கவலையாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement