'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தில் ஹரிணி என்னும் வேடத்தில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
எனினும் பெங்காலி மற்றும் ஹிந்தியில் இரு மொழி திரைப்படமாக வெளியான 'சலோ பிக்னிக் மனையேன்' என்னும் படத்தின் மூலம் தான் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பின்னர் 'பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ,மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா தாத்தா.
இவ்வாறாக படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் இரண்டில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ரியாலிட்டி ஷோ தான் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் ஐஸ்வர்யா தாத்தா. அதுமட்டுமல்லாது இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகி விட்டனர்.
பிக்பாஸ்க்கு பிறகும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அந்த ரியாலிட்டி ஷோவில் இவர்தான் வெற்றியாளராக கோப்பையை தட்டி சென்றிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது 'காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அழகா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா தாத்தா.
இதற்கிடையே பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிகரமான போட்டோ சூட்டிலும் இறங்கி விட்டார். அந்த வகையில் தற்போது இறகு போன்ற மேலாடை அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
Listen News!