• Apr 26 2024

யோகிபாபு படங்களில் நடிக்கத் தடை...? அவர் மீது எழுந்த பரபரப்பு புகார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'தாதா'. இப்படத்தில் இவருடன் இணைந்து நிதின் சத்யாவும் நடித்துள்ளார்.


மேலும் இப்படத்திற்கு கின்ன்ஸ் கிஷோர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் என்பன எழுதி இயக்கி உள்ளார். வித்தியாசமான கதையம்சம் நிறைந்ததாக உருவாகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அத்தோடு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. 

அந்தப் போஸ்டரில் யோகிபாபுவின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் தான் 4 சீனில் தான் நடித்ததாகவும், தயவு செய்து தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் கூறி டிவிட்டர் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார் யோகிபாபு.


யோகிபாபுவின் இந்த செயலால் கடுப்பான தாதா திரைப்படத்தின் இயக்குநர் கிஷோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அங்கு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் கின்னஸ் கிஷோர் பேசுகையில் யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.


அத்தோடு "தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என யோகிபாபு டிவீட் செய்தாலும், அதுகுறித்து கவலையில்லை. தாதா படத்தை எந்த தயாரிப்பாளரும் வாங்கவிடாமல் தடுத்ததால், யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக இயக்குநர் கிஷோர் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி தனது தயாரிப்பில் வேறு ஒரு படத்தில் நடிக்க யோகிபாபு அட்வான்ஸ் பணம் வாங்கி உள்ளதாகவும், ஆனால் இதுவரை நடித்து கொடுக்கவில்லை என்றும் தெரிவித்த கிஷோர், என்னுடையை படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்ததற்காக அவரை எந்த படத்திலும் இனிமேல் நடிக்கவிடக் கூடாது எனத் திரும்பத் திரும்ப தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது யோகிபாபு - தாதா படக்குழு இடையேயான இந்தப் பிரச்சனை தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement