• May 10 2024

படத்தைப் போல நிஜத்திலும் மர்மமான முறையில் இறந்து கிடந்த வேட்டையாடு விளையாடு திரைப்பட நடிகை- 16 வயதிலேயே இப்படியொரு பிரச்சினையா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.அதே போல இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருடைய மகள் ராணியின் கொலை தான் படத்தின் ஆரம்பமாகவே காட்டப்படும். அதில் அவர் மிகவும் மர்மமான முறையில் கொள்ளப்பட்டு இருப்பார். 

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவரது இறப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.இவருடைய பெயர் Bidushi Dash Barde. 1989 ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்த இவர் சிறு வயது முதலே மாடலிங் மீது ஆர்வமுடையவராக இருந்து இருக்கிறார். மாடலிங் அழகி போட்டியில் பங்கேற்ற இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தார். அதன் பின்னரே இவருக்கு கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது.


இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கேதர் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் கழித்து இவர்கள் மும்பையில் குடிபெயர்ந்து உள்ளார்கள். மேலும், இவர்கள் குழந்தை எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நடிகை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து இருக்கிறார்.அலுவலகம் சென்று இருந்த அவரது கணவர் வீடு திரும்பிய போது தன்னுடைய மனைவி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க நடிகையின் மரணம் கொலையா ? தற்கொலையா என்று தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர். பிதுஷியின் முகம் மற்றும் தலையில் அடிபட்டு பிதுஷியின் இது முதலில் கொலை என்ற கோணத்திலேயே விசாரித்து இருக்கின்றனர்.அதே போல அக்கம் பக்கத்தினரிடன் விசாரிக்கையில் பிதுஷி இறந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்து ஒருவர் வெளியில் சென்றார் என்று கூறி இருந்தார்கள்.


இந்த வழக்கு இப்படியே சென்றுகொண்டு இருக்க பிதுஷாவின் கணவரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மனைவிக்கு சக்கரை நோய் இருந்தது.அடிக்கடி தன் அவள் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள். இதனால் அவர் மருந்துகளை எடுத்துவந்தார் என்றும் கூறி இருந்தார். அதே போல பிதுஷியின் தந்தையும் முன்னாள் விமானப்படை வீரருமான சாந்தனுவிடம் போலீஸ் விசாரித்தனர்.


அப்போது அவர், தன் மகளுக்கு 16 வயதில் இருந்தே சக்கரை நோய் இருக்கிறது என்றும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறி இருந்தார். பெற்று திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் கணவர் மனைவி இருவரும் மும்பைக்கு வந்து செட்டில் ஆனார்கள் என்றும் அவர் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிதுஷி , சக்கரை நோய் காரணமாக மயக்கம் அடைந்து நிலை தடுமாறி விழுந்ததில் அவரது மண்டையில் அடிபட்டு இறந்து இருக்கலாம். எனவே, இது கொலை அல்ல எதிர்பாராத விபத்து தான் என்று போலீசார் தெரிவித்துவிட்டார்களாம்.


Advertisement

Advertisement

Advertisement