• May 22 2024

கமல் சார் மாதிரி பேசுங்க- மித்திரன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கடுப்பான கார்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கார்த்தி நடிப்பில் தற்பொழுது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இதில் சர்தார் திரைப்படத்தினை இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்திரன் ,இயக்கி வருகின்றார்

இந்தப் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. சிறுத்தை படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.தந்தை - மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படத்தில் கார்த்தி இடம் பெறும் காட்சிகளுக்கான ஷூட்டிங் திங்கள் கிழமையுடன் முடிவடைந்துள்ளது.அதைத் தொடர்ந்து சில காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை இயக்குநர் பி.எஸ். மித்ரன் தொடங்கியுள்ளார்.

டப்பிங் பணிகளின் போது கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்திரன் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று கார்த்தி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.இந்த வசனத்தை கார்த்தி முதலில் சாதாரணமாக பேச, இதை பார்த்துக் கொண்டிருந்த மித்ரன், நாயகன் கமல் சார் மாதிரி பேசுங்க என சொல்கிறார்.

இதைக் கேட்டு முதலில் ஷாக் ஆகும் கார்த்தி, கமல் சார் மாதிரி தான என சொல்லி விட்டு, வேலு நாயக்கர் ஸ்டைலில் அந்த வசனத்தை பேசிக் காட்டுகிறார். இந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, லைக்குகளை அள்ளி வருகிறது. இருந்தாலும் கமலை கலாய்ப்பது போல் இருப்பதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப் படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர். சர்தார் படத்தில் கார்த்தி உடன் ராஷி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement