விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்பொழுது மீனாவும் முத்துவும் இணைந்து வாழ ஆரம்பித்து விட்டனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் முத்து வந்து மீனாவிடம் ரவி எங்க போய்ட்டான்,நிச்சயம் நின்று போனதால சோகத்தில எல்லாம் இருக்க வேணாம் என்று சொல்லு,அம்மா பணத்தை மட்டும் தான் பார்ப்பாங்க. அப்பா தான் நல்ல பொண்ணா நல்ல குடும்பமா என்று பார்ப்பாரு இதை அவன் கிட்ட சொல்லி வை என்கின்றார்.
மறுபுறம் மீனா வீட்டில் இருக்கும் போது ஸ்ருதி வந்து தானும் ரவியும் காதலிக்கும் விஷயத்தை எடுத்துச் சொல்கின்றார். எங்களை நீங்க தான் எப்படியாது சேர்த்து வைக்கனும் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் மீனா எப்படி முத்துவை மீறி ஸ்ருதியையும் ரவியையும் சேர்த்து வைக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!