• Apr 26 2024

தருணின் அம்மா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்ட ஸ்ருதி- உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவாரா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் பரபரப்பாகவும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம் சீசன் 2.

காதாம்பரியின் தந்தை மல்லிகாவை கடத்தி வைத்து பிறந்த நாள் கொண்டாடுவதை தடுக்கலாம் என நினைத்தார். ஆனால் சக்தியும் வருணும்  மல்லிகாவை கண்டு பிடித்து பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.

இதனை அடுத்து இனி என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் இறந்து போனதாக நினைக்கும் தருண் மற்றும் வருணின் அம்மா உயிருடன் இருப்பது போலவும் அவரை வருணின் அத்தையான சீலா கடத்தி வைத்திருக்கிறார் என்பது குறித்தும் அண்மையில் காட்டப்பட்டது.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தருணின் அம்மா உயிருடன் இருப்பதை காதாம்பரியின் குடும்பத்திற்கு சீலா காண்பிக்கின்றார். இதனால் அதிர்ச்சியான காதம்பரியின் அம்மா இந்த விடயத்தை நேராக ஸ்ருதிக்கு வந்து கூறுகின்றார்.இந்த ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம். 


Advertisement

Advertisement

Advertisement