சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், கற்றது களவு, கசடதபற போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
மேலும் இவரை மிகவும் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் வைல்டு காட்டு போட்டியாளராக கலந்துகொண்ட இவர் இறுதிப்போட்டி வரை முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்தார்.
எனினும் இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய விஜி, டைட்டில் வின்னர் ஆனது மட்டுமின்றி ரூ.1 கோடி பரிசுத் தொகையையும் வென்றார்
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் பேட்டி ஒன்றில் மீடூ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது...சினிமாவில் கேஸ்டிங் கவுச் என்பது இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் இதற்கு காரணம். எதோ ஒரு பெண் சம்மதித்ததனால் தான் மற்ற பெண்களிடமும் கேட்குறாங்க, எனக்கும் இதுபோல் நடந்திருக்கிறது.
சிறுவயதில் நான் கராத்தே கற்றுக்கொள்ள சென்றபோது அந்த மாஸ்டர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அதை உடனே என் தந்தையிடம் வந்து சொன்னேன். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே குட் டச் எது பேட் டச் எது என்பதை சொல்லிக்கொடுத்தால் இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்பாக இருக்கும்” என விஜயலட்சுமி ஒப்பனாக கூறியுள்ளார்.
Listen News!