• Apr 02 2025

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கான ஈஸ்வரி ரெஸ்டாரண்ட்! மனம் மாறிய ஜெனி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி ரெஸ்டாரண்டை மினிஸ்டர் வந்து ஓபன் பண்ணுகிறார். கோபி கோவத்தில் வெளியேறுகிறார்.

இதை தொடர்ந்து, ராமமூர்த்தி, ஈஸ்வரி, மினிஸ்டர், அமிர்தா, ஜெனி, செல்வி என விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். அதன்பின் பாக்கியா எல்லாருக்கும் நன்றி சொல்லி பேசுகிறார். மினிஸ்டரும் பாக்கியாவை புகழ்ந்து பேசிவிட்டு செல்கிறார்.


இதையடுத்து, எல்லாரும் சாப்பிடுகிறார்கள். பாக்கியா  ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதன்பின், ஜெனி போவதற்கு வெளிக்கிட ஈஸ்வரி அழுகிறார். செழியனை அழைத்து செல்லுமாறு ராமமூர்த்தி சொல்லுகிறார். முதலில் வேணாம் என்று ஜெனி சொல்ல, ராமமூர்த்தி சொன்ன காரணத்தினால் செழியன் கூட போவதற்கு ஒப்புக் கொள்கிறார்.

ஜெனி காரில் ஏரி போகும் போது, அவரை எல்லாரும் கவலையுடன் வழியனுப்பி வைக்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement