• Apr 28 2024

புவனாவைக் கடத்திய செல்வா- அமுதா எடுத்த அதிரடி முடிவு- அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்  தான் அமுதாவும் அன்னலட்சுமியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.அன்னம், புவனா நடந்து வந்து கொண்டிருக்க புவனாவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அடுத்து அன்னம் அமுதாவிற்கு போன் செய்து அழைக்க அமுதா அனைவரிடமும் கோப்படுகிறாள். அடுத்து அவர்கள் கடத்தியது செல்வாவின் ஆட்கள் என தெரிய வருகிறது.

பின்னர் செல்வாவிடம் அமுதா பேச, அவர் என் மகள் இன்று  சாயந்திரம் 5 மணிக்குள்ள என் வீட்டுக்கு வரலை, உங்க வீட்டு பொண்ணு உசுரோட இருக்காது என மிரட்ட அமுதா புவனாவை பார்க்க வேண்டும் என கூறுகிறாள்.


அடுத்து அமுதா புவனாவை சந்திக்க உள்ளே செல்ல புவனா இரண்டு கிழவிகளுடன் அமர்ந்திருக்கிறாள். புவனாவிடம் அமுதா தைரியம் சொல்லிவிட்டு வருகிறாள்‌. அடுத்து குமரேசனிடம் அன்னலட்சுமி சென்று விஷயத்தை சொல்லி உதவி கேக்க அவர் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. செல்வாவை யாரும் நெருங்க முடியாது என கை விரிக்கிறார்.

அன்னலட்சுமி செய்வதறியாவது அங்கிருந்து நகர பழனி குமரேசனிடம் வடிவேல் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான், செல்வாவே அந்த குடும்பத்தை போட்டுத் தள்ளிருவான் என சொல்கிறான்.

மாணிக்கம் அமுதாவிடம் செந்திலை அழைத்து விஷயத்தை சொல்லலாம் என சொல்ல, அமுதா வேண்டாம் அவக இப்ப தான் காலேஜுக்கு போயிருக்காக அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டு, இரவு பரமு சின்னா பேசியது ஞாபகத்துக்கு வர, அமுதா அவர்கள் ரூமில் சென்று பார்க்கிறாள்.

அமுதா சந்தேகப்பட்டது போலவே அங்கு கோவிலில் கல்யாணம் நடைபெறுவதற்காக வாங்கப்பட்ட ரசீது இருக்கிறது. அமுதா யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement