• Apr 28 2024

தலை தூக்கிய நடிகை விஜயலட்சுமி விவகாரம்... நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்...!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. 


சினிமாவில் இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கையில் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அதிலும் குறிப்பாக அரசியல் பிரபலமான சீமானுக்கும் இவருக்கும் நடந்து வரும் பிரச்சினைகள் சீரியல் போன்று நீண்டு கொண்டு போகின்றது.


ஏற்கெனவே சீமான் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்த விஜயலட்சுமி தற்போது மீண்டும் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் வழக்கில் சீமானை கைதுசெய்யக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

அதில் சீமான் கட்டாயத்தின் பேரில் தன்னை  7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலீசார் கீழ்பாக்கம் அரச மருத்துவமனையில் சுமார் 2 மணிநேரம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இதன் முடிவுகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் இன்று காலை ஆஜராக வேண்டும் எனக்கூறி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் சீமான் வெளியூர் செல்ல இருப்பதால், 12ம் தேதி ஆஜராவதாக சீமான் தரப்பு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement