• Sep 14 2025

கூட்டம் அல்ல, கொள்கையே முக்கியம்...!மக்கள் நம்பிக்கையை வலியுறுத்தும் சீமான்...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், கூட்டம் மற்றும் கொள்கை குறித்து திறந்தமாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். பலர் நடிகர்களைப் போல பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கும் நிலையில், சீமான் அதற்கு வித்தியாசமான பார்வையுடன் விளக்கமளித்தார்.


"ரஜினி, அஜித்துக்கு இதைவிட அதிக கூட்டம் வரும். நடிகரைப் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். நயன்தாரா கூட வந்தா கூட்டம் இன்னும் அதிகமாகும். ஆனால், கூட்டத்தை விட கொள்கைதான் முக்கியம்," என அவர் வலியுறுத்தினார்.


அதுபோலவே, "நான் மக்களுக்காக அதிகம் பாடுபடுகிறேன். என்னுடைய வாழ்க்கையே இந்த நிலத்தில் பசிக்குடிக்கும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. எனவே, கூட்டத்தைப் பார்க்க வேண்டாம்; கொள்கையைப் பார்க்க வேண்டும்," என்று சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வேரூன்றும் முயற்சியில் உள்ளது. தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டு, மக்கள் மத்தியில் தங்களின் கொள்கைகளை பரப்பி வருகின்றது. இந்தநிலையில், நடிகர்கள், பிரபலங்கள் போன்றவர்களுடன் ஒப்பிடப்படுவது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு சீமான் தரும் பதில்கள், அவரது அரசியல் நோக்கத்தை பிரதிபலிக்கின்றன.

சமூக நீதி, தாய்நாடு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மையமாகக் கொண்டு செயற்படும் நாம் தமிழர் கட்சி, 

Advertisement

Advertisement