• May 04 2024

மணிரத்னத்தின் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவியா?..அடடே அது இந்தப் படமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'பிரேமம்' என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சிக்குச் சென்றவரே நடிகை சாய் பல்லவி. அதுமட்டுமல்லாது இந்தியத் திரைப்படத் துறையில் இருக்கும் மிகக் குறைவான தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் மட்டுமன்றி நடனத்திலும் கை தேர்ந்தவர். தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற பல நடன நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது 'ரவுடி பேபி….' பாடலுக்கு இவர் நடிகர் தனுஷூடன் சேர்ந்து ஆடிய நடனம் இன்றும் நம்மால் மறக்க முடியாது.

'பிரேமம்' பட வெற்றியை தொடர்ந்து அதன் பின் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு தமிழில் நடித்த படங்களின் எண்ணிக்கையை விட தெலுங்கில் அதிகளவான படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் 'கார்கி' என்ற படம் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களினையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி சாதாரண பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு சாதாரணமான கேரக்டரில் தான் நடித்து இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு கூட இவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில் தற்போது சாய் பல்லவி அவரது கெரியரில் தவறவிட்ட ஒரு முக்கிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தில் படக்குழுவினர் சாய் பல்லவியை தான் முதலில் நடிக்க வைக்க இருந்ததாகவும், அது நடக்காததனால் தான் அதன் பின் அதிதி ராவை அந்த படத்தில் ஹீரோயினாக மணிரத்னம் நடிக்க வைத்திருக்கிறார் எனக் கூறப்பட்டு வருகின்றது.

இதை அறிந்த சாய் பல்லவியின் ரசிகர்கள் 'அடடே இப்பிடி ஒரு படத்தை தவற விட்டு விடடீர்களே' எனக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement