• May 18 2024

சிம்புவின் போஸ்டரை அகற்றிய போலீஸார்…காரணம் என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் சிம்பு. வாரிசு நடிகரான இவர் தன்னுடைய காதல் வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்து இருக்கின்றார்.

திரையுலகில் 'காதல் அழிவதில்லை' என்ற படத்தில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்ற நடிகர் சிம்புவின் நடிப்பில் தற்போது உருவாகின்ற 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் அண்மையில் முடிவடைந்தது.

அதுமட்டுமல்லாது ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' என்ற படத்திலும் நடித்து வருகின்றார். இவரோடு இணைந்து இப்படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்படம் டிசம்பர் 10-ஆம் திகதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகாவின் 50-ஆவது படமான 'மஹா' என்ற படத்திலும் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இப்படத்தில் சிம்புவின் ஆர்வத்தைக் கண்ட இயக்குநர் சிம்புவை முக்கிய கேரக்டராக மாற்றியமைத்தார். அந்த வகையில் 'மஹா' என்ற இத்திரைப்படமானது எதிர்வரும் 22-ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் போஸ்டர் ஒன்றினை அடித்து ஒட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது இந்தப் போஸ்டர் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது அதிகாரிகளின் அனுமதியை பெறாமல் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளமையால் போலீஸார் அதனை அகற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement