• Apr 28 2024

மஹாலட்சுமிக்கு மாமியார் கொடுமை... அதுவும் இந்தப் பொருளை கொண்டு வராவிட்டாலா...? வெளிப்படையாக கூறிய ரவீந்தர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் விடயம் என்றால் அது பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோரது திருமணம் தான். சமீபத்தில் குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்ட இவர்களை பற்றியே கடந்த ஒரு வாரத்திற்கு முன் பரபரப்பாக பலரும் பேசினார்கள்.


அதாவது மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் எனப் பல விதமாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருந்த. எனினும் இவற்றை எல்லாம் கேட்டு கொஞ்சம் கூடி தயங்காமல் வந்த ட்ரோல்கள் அனைத்திற்கும் அவர்கள் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர். 


அதுமட்டுமல்லாது திருமண புகைப்படங்கள், மற்றும் ரொமான்டிக் புகைப்படங்கள் என அடிக்கடி பதிவிட்ட வண்ணமே இருக்கின்றனர். அத்தோடு சமீபத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தனர்.


இந்நிலையில் இன்றும் ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் ஒரு க்யூட்டான பதிவை போட்டிருக்கிறார். அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மஹாலக்ஷ்மி ஷூட்டிங் இருக்கிறது என சொல்லி காலையிலேயே ரெடியாகி கிளம்பி சென்றுவிட்டாராம்.

இதனால் அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பாடு செய்து அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தானே கொண்டு சென்று இருக்கிறார் ரவீந்தர்.


இது தொடர்பாக அப்பதிவில் அவர் "சண்டே family time என எல்லோரும்சொல்கிறார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது. "அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு என் மனைவிக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன்."

"பொண்டாட்டி மஹாலக்ஷ்மி ஷங்கர். எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டுவந்துவிடு. இல்லை என்றால் மாமியார் கொடுமையோடு சேர்த்து, அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்துவிடுவார்" என ரவீந்தர் மிகவும் கிண்டலாக தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement