• May 04 2024

கடைசியாக நண்பனின் முகத்தை காண ஓடோடி வந்த ரஜினிகாந்த்..

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகம் இந்த ஆண்டு பல பிரபலங்களை இழந்துள்ளது. அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. 


வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக ரசிகர்களும் தொண்டர்களும் வந்துகொண்டிந்தனர். இதனை அடுத்து தற்பொழுது  ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக, காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் பொது அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. பின் மதியம் ஒரு மணிக்கு மேல், விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேதிமுக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் அவர்களும் இறுதியாக கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தார். நடிகர் விஜயகாந்த் மனைவி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு. விஜயகாந்த் அவர்களுக்கு மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

Advertisement

Advertisement

Advertisement