• Apr 28 2024

விக்கி மற்றும் நயன் காதலுக்கு பிரபுதேவாதான் காரணம்... ரகசிய செய்தியை கூறிய ராகுல் தாத்தா...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இடையில் காதல் மலர்ந்ததற்கு இதுதான் காரணம் என்று ராகுல் தாத்தா ஒரு ரகசியத்தை கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்த நயன் மற்றும் விக்கி தம்பதியினர் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் திருமணம் ஆன சில மாதங்களிலேயே வாடகை தாயின் மூலம் இரண்டை குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர். இந்த செய்திகளுக்கு எல்லாம் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தமது  குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் நயன், விக்கி காதல் முளைக்க காரணமாக இருந்த படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடிதான்" திரைப்படமாகும். நடிகை நயன்தாரா நடிகர் சிம்பு மற்றும் பிரபு தேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளை சந்தித்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். இனி தனக்கு எல்லாமே சினிமா தான் என்று முடிவெடுத்து கடுமையாக உழைத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டார்.

அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது காட்டிய அன்பு அவருக்கு மிகவும் பிடித்த போக இருவரும் காதலித்து வந்தனர். இந்த சூழலில் இவர்களின் காதலுக்கு காரணமாக இருந்தது பிரபுதேவா தான் என விஜய் டிவி பிரபலம் உதய பாணு என்பவர் தெரிவித்துள்ளார்.

உதயபாணு என்று சொன்னால் உடனே ஞாபகம் வராது "ராகுல் தாத்தா" என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வந்திருக்கும். அதாவது நானும் ரௌடி தான் படத்தில் இவர் ராகுல் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதிலிருந்து ராகுல் தாத்தா என்று தான் இவர் அழைக்கப்படுகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் சாயல் மற்றும் நடவடிக்கை எல்லாமே பிரபுதேவா போல் இருப்பதாக ராகுல் தாத்தாவிற்கு எண்ணம் வந்துள்ளது. இதை நேரடியாகவும் விக்னேஷ் சிவனிடம் கூறி உள்ளாராம். நயன்தாராவிடமும் விக்னேஷ் சிவனை பார்க்கும்போது பிரபுதேவா போல் உள்ளார் என்று ராகுல் தாத்தா கூறினாராம் இதனால் தான் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் வந்துள்ளது. ஆகையால் இவர்களின் காதலுக்கு அடித்தளம் போட்டது நான்தான் என ராகுல் தாத்தா பெருமையாக பேசி வருகிறார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இது என்ன புது உருட்டாக இருக்கிறது என ராகுல் தாத்தாவை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement