• Oct 22 2024

கண்ணீர் வடித்து அழுத ராதிகா...தாய் போட்ட உத்தரவால் திகைத்துப்போய் நின்ற கோபி...இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

ஈஸ்வரி மகனை நினைத்து கண்ணீர் வடித்து அழுது கொண்டு இருக்கிறார் .ஏன் அழுகிறாய் எனக் கேட்டதும்  எல்லாம் கோபியை நினைத்து தான் எனக் கூறுகின்றார். இதன் பின் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு ராதிகா வீட்டில் அமர்ந்து இருக்கின்றார்.அந்த நேரம் ஈஸ்வரி கோபிக்கு போன் பண்ணி கோயிலில் பார்ப்பதற்கு வரச் சொல்லுகின்றார்.

ஆனால் ராதிகாவோ. இங்கே வந்து பார்க்க வேண்டியது தானே எனக் கூற அது சரி வராது என கோபி சொல்லிவிட்டு செல்கின்றார்.அதன் பின் ராதிகா தனது தாய்க்கு போன் பண்ணி நடந்த விடயத்தைக் கூறி கதறி அழுகின்றார்.பின் அவரும் ராதிகாவிற்கு ஆறுதல் கூறி விட்டு தான் அங்கே கிளம்பி வருவதாக கூறுகின்றார்.


இதன் பின் கோயிலில் வைத்து கோபியும் ஈஸ்வரிப் பாட்டியும் சந்தித்து பேசுகின்றனர்.அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது ராதிகாவும் கோயிலுக்கு வந்து விடுகின்றார்.இதன் பின் ஏன் இப்படி ஆச்சு..என கண்கலங்கி அழுகின்றார்.என்ன நடந்தது என பேசிக்கொள்கின்றார்.அதன் பின் சத்தியமா குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்கின்றார்.


அதன் பின்..நீ பேசமா எங்க வீட்டிற்கே வந்திடு எனக் கூறுகின்றார் ஈஸ்வலரி.அதுக்கு கோபி அது எப்பிடி முடியும் என கோபி சொல்கின்றார்.நிம்மதி இல்லாமல் இப்படி வாழுறதிற்கு எல்லாத்தையும் எறிந்து விட்டு நம்ம வீட்டிற்கு வாடா..நாம எல்லாத்தையும் சரி செய்யலாம் என ஈஸ்வரி கூறுகின்றார்.


வீட்டிற்கு வாராய்..என ஆடர் போட்டு விட்டு செழியனைக் கூட்டிட்டு செல்கின்றார் ஈஸ்வரி.கோபி செய்வது அறியாமல் திணறுகின்றார்.இதை அனைத்தையும் ராதிகா கேட்டு விட்டு கோபி காரிற்கு ஏற திடீரென ராதிகாவும் வந்து உள் நுழைகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


  

Advertisement