• May 19 2024

கோபி பாக்கியாவிடம் போனில் பேசுவதைக் கேட்ட ராதிகா- விபத்தில் சிக்கிய இனியா மற்றும் ஈஸ்வரி-Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பாரப்போம்.

கோபி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது உனக்கு கார் ஒழுங்காக ஓட்டத் தெரியும் தானே, இல்லை என்றால் சொல்லு, டிக்கெட் போட்டு அம்மாவையும் பொண்ணையும் நான் பிளைட்ல கூட்டிட்டு வருகின்றேன் என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீங்க உங்கவேலையை பார்த்தால் போதும் என்கின்றார்.


அப்போது கோபி பிளைட்ல போறது என்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா, உன் கிட்ட பணம் இருக்கின்றதா என நக்கலாகப் பேச பாக்கியா அதெல்லாம் இருக்கு உங்களுக்கு செலவுக்கு பணம் வேணும் என்றால் சொல்லுங்க, தரலாமா வேணாமா என்று யோசிக்கின்றேன் என்று கோபமாகப் பேசி விட்டு போனை வைக்கின்றார்.

இதனை எல்லாம் ராதிகா பின்னாடி நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். ராதிகாவைப் பார்த்த கோபி மளுப்ப, ராதிகா பாக்கியா இடத்தில நான் இருந்திருந்தால் உங்களை சும்மாவே விட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் உங்களுக்கு தேவையா எனத்திட்டி விட்டு போகின்றார். தொடர்ந்து பாக்கியா கார் ஓட்டிட்டு போகும் போது பாட்டு போட்டிருப்பதால் இனியாவும் செல்வியும் காருக்குள்ளேயே டான்ஸ் ஆடிக்கிட்டு வருகின்றனர்.


தொடர்ந்து கோபியின் நண்பன் கோபியை சந்திக்க வந்திருக்கும் போது அப்பவும் கோபி பாக்கியாவைப் பற்றி புலம்ப அவர் இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிறதுக்காக வாங்கிய பணத்தை திரும்பத் தரச் சொல்கின்றார். அப்போது கோபி தன்னுடைய ஆபிஸீக்கு போன் பண்ணி கேட்கின்றார். அங்கே பணம் இல்லாததால் இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை தந்து விடுகின்றேன் என்கின்றார்.

பின்னர் பாக்கியா கார் ஓட்டிட்டு வரும் போது ஒரு வயது முதிர்ந்தவர் பாக்கியாவின் காரில் மோதி கீழே விழுந்து விடுகின்றார். அப்போது அங்கிருப்பவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி விட பாக்கியாவும் பயந்து போய் கீழே இறங்கிப் பார்க்கின்றார். போலீஸும் அந்த இடத்திற்கு வந்து பாக்கியாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.

உங்களுடைய லைசன்சை காட்டுங்க என்று கேட்ட போது பாக்கியா எல்லா இடமும் தேடி விட்டு, தொலைஞ்சு போன பர்சுக்குள்ளதான் லைசன்ஸ் இருந்திச்சு அத்தை என்று சொல்ல ஈஸ்வரியும் இனியாவும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் பாக்கியா போலீஸாருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி பழனிச்சாமிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தைச் சொல்கின்றார்.


மேலும் போலீஸாருடனும் பேசுகின்றார். அவர்கள் லைசன்சை கொண்டு வந்து கொடுத்தால் எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்ல பாக்கியாவை வீட்டுக்கு போன் பண்ணி லைசன்ஸ் இருக்கா என்று கேட்கச் சொல்ல பாக்கியாவும் ராமமூர்த்திக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தைச் சொல்கின்றார். ராமமூர்த்தி கன்டீனில் நின்று இந்த விஷயத்தைக் கேட்கின்றார். அப்போது ராதிகாவைப் பார்க்க வந்த கோபியும் ஏதோ பிரச்சினை என்று தெரிந்தவுடன் குழப்பத்தில் நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement