• Sep 21 2024

திடீரென வீட்டிற்கு சென்ற பாக்கியாவிடம் கதறி அழும் ராதிகா- மீண்டும் பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பு உச்சத்தில் செல்லும் சீரியல் தான் பாக்கிலட்சுமி தொடர்.தற்போது எல்லா உண்மைகளும் தெரிந்து அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….

பாக்கியா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க செல்வி நான் கூட உன் மாமியார் கூப்பிட்டதும் வீட்டுக்கு போய்டுவியோனு நினைச்சேன்.ஆனால் நீ செல்லவில்லை.இப்படியே இருந்திடு அக்கா .இது தான் உனக்கு நல்லம்.அந்த வீட்டுக்கு போகாதே.

அந்த வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? ஆனால் குடும்பத்தாரை நினைச்சா தான் பாவமா இருக்கு என சொல்கிறார். திடீரென ராதிகா ஞாபகம் வர பாக்கியா செல்வியிடம் ஆட்டோவை வர சொல்லு என சொல்ல செல்வி அதுக்குள்ள உன் கோவம் போய்டுச்சா? என கேள்வி மேல் கேள்வி கேட்க பொறுமை இழந்த பாக்கியா நடந்தே ராதிகா வீட்டிற்கு சென்றுவிடுகின்றார்.

மேலும் ராதிகா இவர்களை பார்த்ததும் சாதாரணமாக வழக்கம் போல பேசி உள்ளே அழைக்க பாக்கியா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே ராதிகா என சொல்ல ராதிகா எதுவும் புரியாமல் நான் என்ன பண்ணேன் என சொல்கிறார்.

அக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து போச்சு என சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நான் தெரிந்தே உங்க வாழ்க்கையில வரை என சொல்கிறார். மும்பைக்கு போறேன்னு சொன்னது என்னாச்சு என கேட்க மயூவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல பாக்கியா மயூவுக்கு உடம்பு சரியில்லையா? இல்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்.

ராதிகா கதறி அழுது நான் தெரிஞ்சு உங்கள் வாழ்க்கையில் வரல என சொல்ல பாக்கியா அதை நம்பாமல் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement