தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்ககளில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருகின்றன. வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதோடு இவரது பஞ்ச் டயலொக் எல்லாம் மிகவும் பிரபல்யமானவை.
நடிப்பைத் தவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக சில காலத்திலேயே நடிப்பதை விட்டு விட்டு முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் சமீப காலங்களில் இவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. வெளிநாட்டில் சென்று சிகிச்சைப் பெற்றுவந்த விஜய்காந்தின் உடல்நிலை சிறப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 76வது சுதந்திர தினத்தையொட்டி கட்சி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய விஜய்காந்த்தின் தோற்றத்தை பார்த்த தொண்டர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். அத்தோடு உடல்நிலை சரியில்லாத அவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவந்து ஏன் கஷ்டப்படுத்துகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், இன்றைய தினம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துக் கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, சுதந்திர தினத்தின்போது ரசிகர்களை சந்திக்க வேண்டுமென்று தலைவர் ஆர்வம் காட்டியதால்தான் அவரை அழைத்து வந்ததாகவும், இதை யாரும் திரித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நாளைய தினம் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது தொண்டர்கள் அவரை நேரில் காண வரலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி கட்சி மற்றும் ரசிகர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!