கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலும் இந்த பாடல் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அத்தோடு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!