பொன்னியின் செல்வன் போஸ்டரில் இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்து செய்துள்ள கிராபிக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த 30ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகள் போராட்டத்தின் பின்னர் இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். எதிர்பார்த்ததை விட படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.
எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் வெளியாகியது.ந்த படம் குறித்த மீம்கள், போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதே போல படத்தில் நடித்த நாயகர்கள் போல பிரபலங்கள் பலரும் தம்மை அலங்கரித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளதால் கிரிக்கெட் செய்திகளை வழங்கும் டுவிட்டர் பக்கம் ஒன்றில் பொன்னியின் செல்வனின் போஸ்டரில் இந்திய வீரர்கள் முகத்தை கிராபிக்ஸ் செய்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் ஆதித்த கரிகாலனாக ரோகித் சர்மாவும், அருள்மொழியாக விராட் கோலியும், வந்தியத்தேவனாக சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர். அதில் “இந்தியன் செல்வன்ஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை பொன்னியின் செல்வனை தயாரித்த லைகா நிறுவனமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!