• Sep 08 2024

விஜய்க்கும் அப்பாவுக்கும் மீண்டும் சண்டை.. வெங்கட் பிரபு செய்த தரமான செயல்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நிஜ வாழ்வில் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் சண்டை என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தனது அப்பா அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தில் அப்பா - மகன் ஆகிய இரண்டு கேரக்டரில் விஜய் நடித்திருப்பதாகவும் பல காட்சிகள் அப்பா - மகன் சென்டிமென்ட் இருந்தாலும் அப்பா கேரக்டர் சிறிது வில்லத்தனமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தில் அப்பா - மகன் மோதும் ஸ்டண்ட் காட்சிகள் தான் படத்தின் ஹைலைட் என்றும் இந்த காட்சிக்காகத்தான் நியூயார்க்கில் கிராபிக்ஸ் மூலம் படமாக்கப்பட்டு இருப்பதாகவும்,  இதுவரை இல்லாத வகையில்  வித்தியாசமாக இந்த ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்பா - மகன் என்ற இரண்டு கேரக்டர் போக இன்னொரு கேரக்டரில் விஜய் நடித்திருப்பதாகவும் அதை சஸ்பென்ஸ் ஆக படக்குழுவினர் வைத்திருப்பதாகவும் அது குறித்த புகைப்படங்கள் கடைசி வரை வெளியிடப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ’மெர்சல்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் 3 கேரக்டர்களில் நடிக்கும் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அப்பா விஜய்யின் வில்லத்தனத்துக்கு உதவும் கேரக்டராக மோகன் மற்றும் மகன் விஜய் கேரக்டருக்கு உதவும் கேரக்டராக பிரசாந்த் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’கோட்’ படத்தின் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் தரமான செயல் தெரிய வருகிறது.

Advertisement

Advertisement