• Jan 08 2026

கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் தாமதமாக வந்தாரா.? வெளியானது போலீஸ் எஃப்ஐஆர் விவரம்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டம் தொடர்பாக எழுந்த சர்ச்சை புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. போலீசார் சமீபத்தில் பதிவு செய்த எஃப்ஐஆர் (FIR) பிரகாரம், த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்ட விதமாக கூட்டத்தினை அதிகரிக்கும் நோக்கத்துடன் நிகழ்விடம் வரும் நேரத்திற்கு தாமதமாக வந்ததாக கூறப்பட்டுள்ளது.


கரூர் மாவட்ட  போலீசார் முன்னதாகவே இந்த நிகழ்வு தொடர்பாக பாதுகாப்பு முறைகள், கூட்ட நிர்வாகம், மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தி கடுமையான எச்சரிக்கைகளை வழங்கியிருந்தனர். பொதுமக்கள் கூட்டம் கட்டுப்பாடுகளை மீறி பெரிதாகும் அபாயம் இருப்பதாக முன்னரே தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். 

எனினும், த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் பிற நிர்வாகிகள், இந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து செயல்பட்டுள்ளனர். மேலும், "உயிர்சேதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகக்கூடும்" என காவல்துறையினர் தெரிவித்தும், அந்த எச்சரிக்கைகளையும் அக்கறை இல்லாமல் விலக்கி வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பங்கேற்ற முக்கிய தலைவர்கள் சிலரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலதிக நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement