• May 04 2024

ரோபோ சங்கர் மீது மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்-பதறிப்போன ஏ ஆர் ரகுமான்..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குநர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை தன் வசம் கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்படுகின்றது.

தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. எனினும் தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த மார்ச் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் பார்த்திபன் செய்த செயல் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.அது என்னவென்றால் முதல் பாடல் வெளியீட்டின் போது ஏ ஆர் ரகுமான், பார்த்திபன் இருவரும் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில் ரோபோ சங்கர் உங்கள் மைக் கொஞ்சம் வேலை செய்ய வில்லை.அதனால் உங்களுக்கு வேற மைக் தருகிறோம் என கூற அதற்கு பார்த்தீபன் இதை முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா என கேட்டு விட்டு கோபத்தில் ரோபோ சங்கர் மீதே அந்த மைக்கை தூக்கி எறிந்து விட்டார்.இதனை பார்த்த ஏ ஆர் ரகுமான் கொஞ்சம் பதறி சமாதானப்படுத்தினார்.

பின்னர் விழாவில் பேசும்போது பார்த்திபன் கூறியிருப்பது… பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன்.ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் ஒரு சில்டு கொடுத்தார். அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது. என்னால் வெளியில் கத்த முடியவில்லை. அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை.

அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement