பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், கதிர் காந்திமதி கிட்ட எல்லா இடமும் தேடி பார்த்திட்டேன் அம்மாவைக் காணோம் என்கிறார். பின் பாண்டியனுக்கு போன் எடுத்து காலையில இருந்து அம்மாவை காணேல என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட பாண்டியன் உடனே வீட்டுக்கு கிளம்பி வாறார். அதைத் தொடர்ந்து கதிர் பாண்டியனைப் பார்த்து இப்ப சந்தோசமா உங்களுக்கு கொஞ்சம் கூட அவங்களை மதிக்கவே இல்ல, அப்படி என்ன கோபம் என்று கேட்கிறார்.

பின் செந்திலும் நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ என்கூட பேசாம இருந்தீங்க, பிறகு கதிர் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ அவன் கூடயும் பேசாம இருந்தார்... எல்லாம் வெட்டி வீம்பு என்கிறார். அந்த நேரம் பார்த்து கோமதி வீட்ட வந்து நிக்கிறார்.
அதைப் பார்த்த பின் பாண்டியன் கதிரையும் செந்திலையும் பார்த்து ரெண்டு பேரும் என்ன பேச்சுப் பேசினீங்க நான் பண்ண விசயத்தால நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாவே இருக்கலயா என்று கேட்டு என்கிட்ட வாங்கின 10 லட்சம் ரூபாவை திருப்பி 2 மாசத்தில தரணும் என்கிறார். இதுதான் இனிநிகழவிருப்பது...
Listen News!